காஞ்சிபுரம் மாவட்டம்
படப்பையில் குங்ஃபூ தற்காப்பு கலையில் வென்று அசத்திய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை
இயக்குனர் கௌதம் வழங்கினார்..
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியில் சிவபாரதி மார்ஷியல்
ஆர்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குங்ஃபூ போன்ற தற்காப்புகளை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தற்காப்பு கலைகளை கற்று அசத்தி வரும் மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் கலர் பட்டைகள் வழங்கும் நிகழ்வு கிராண்ட் மாஸ்டர் சிவபாரதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் பா.கௌதம், மாநில சிலம்ப பயிற்சியாளர் நாகராஜ் மற்றும் விக்னேஸ்வரா பாக்சிங் கிளப் மாஸ்டர் அ.வே.பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் கலர் பட்டைகளை, மெடல் போன்றவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்து கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் கிராண்ட் மாஸ்டர்கள் கே.எஸ்.செந்தில்குமார், யுவராஜன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.