மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் மதுரை கலைப் பண்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி, உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒத்தக்கடை ஊராட்சி மன்றத்தலைவர் முருகேஸ்வரி சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா முன்னிலை வகித்தனர். ஒத்தக்கடை மைய திட்ட அலுவலர் சித்திரலேகா வரவேற்றார். நிகழ்வில் குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோடைகால முகாமில் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒத்தக்கடை ஊராட்சியின் சார்பிலும் குழந்தைகளுக்குப் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் உதவியாளர் ரமிஜா பேகம், ஒருங்கிணைப்பாளர் ராஜு, ஓவிய ஆசிரியர் சையது இப்ராஹிம் கலந்து கொண்டனர்.
ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற ஆஷா பானுக்குப் ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவி) பாராட்டுத் தெரிவித்தனர். ஓவிய ஆசிரியர் செம்மலர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒத்தக்கடை பள்ளி ஆசிரியர் மோசஸ், பரதநாட்டிய ஆசிரியர் ஷோபனா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.