தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் கிராமத்தை சேர்ந்த 2 கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுதிறனாளி மாணவர், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் மாணவனின் வீடிற்கு நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்து, பரிசு தொகை வழங்கினார்.

உடன் மாவட்ட அவைத் தலைவர் TA.நாகராஜ் அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள் BK.கோவிந்தசாமி அவர்கள், சாவித்திரி கடலரசு மூர்த்தி அவர்கள், பொதுக் குழு உறுப்பினர் அஸ்லாம் அவர்கள், நகர செயலாளர் SK.நாவப் அவர்கள், ஒன்றிய செயலாளர்கள் திரு.B.கோவிந்தன், தனசேகரன் அவர்கள்,சங்கர் அவர்கள், அன்பரசன் அவர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *