தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மல்லபள்ளி ஊராட்சி ஏரியூர் கிராமத்தில் மின்னொழியில் கபடி போட்டி கடந்த 18 ஆம் தேதி தொடங்கி இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 8 பரிசுகளும் பெண்கள் பிரிவில் 8 பரிசுகளும் அறிவிக்கப்பட்டது இதில் பெண்கள் பிரிவில் முதல் பரிசை காஞ்சிபுரம் மாவட்டம் தட்டிச் சென்றது மற்றும் இரண்டாவது பரிசை பெங்களூர் அணி தட்டி சென்றது.

இப்போட்டியை காண்பதற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை நகர்மன்ற தலைவர் காவியா விக்டர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *