தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர குண்டு சுடும் பயிற்சி 24.04.2023முதல்02.05.2023 வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்

இதில் சிறப்பாக குண்டு சுடும் பயிற்சி மேற்கொண்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம்,
காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, காவல் ஆய்வாளர் சரண்யா,
காவல் ஆய்வாளர் கண்ணன்காவல் உதவி ஆய்வாளர் சாந்தி,
காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன், காவலர்கள்
ரகுபதி, புருசோத்தமன், திருப்பதி,சரசு,செல்வி.நந்தினி, .சுதா ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *