விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த வானூரில் தேமுதிக ஒன்றிய செயலாளர் மதியழகன் இல்ல திருமண வரவேற்பு விழா அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக கார் மூலமாக சென்னையில் இருந்து வருகை தந்த தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் எல். வெங்கடேசன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு.அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான தேமுதிக கொடி கம்பத்தில் தேமுதிக கொடியை திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,மாநில கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ராஜா சந்திர சேகர். மாவட்ட அவைத் தலைவர் கணபதி,
மாவட்ட பொருளாளர் தயாநிதி ,மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரேசன் ,வெங்கடேசன் சூடாமணி,பாலாஜி,
மயிலம் ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கனகராஜி, புண்ணியக் கோட்டி, செல்வம், பாலசுந்தரம், டி.சி முருகன், மாதவன், பாஸ்கர், கோவிந்தராஜி, வெங்கடேசன், மணிகண்டன், ராஜேஷ்குமார்,
ஹேமா ராமநாதன், வேலு, தண்டபாணி, மணி,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *