பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், தேவாமங்கலம் ஊராட்சியில் MGNREGS/ 2022 – 23, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி (KAVIADP)
திட்டத்தின் கீழ் ரூ. 44.63 இலட்சம் மதிப்பீட்டில் வ.உ.சி நகர் தெற்கு வயல் மண் சாலையை மெட்டல் சாலையாக அமைக்கும் பணியையும், மற்றும் ரூ. 13.50 இலட்சம் மதிப்பீட்டில் இவ்வூராட்சிக்கு உட்பட்ட வடுகனேரி வாரியில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியையும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் துவக்கி வைத்தார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஒன்றிய பொறியாளர் நடராஜன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன், ஒன்றிய அவைத் தலைவர் தங்க. சிவப்பிரகாசம், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான
இரா சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர. முருகன்,
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் ராவணன், ராதாகிருஷ்ணன்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *