கந்தரவக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான விரிவுபடுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி கந்தர்வகோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நடைபெற்ற ஆங்கிலப்பாடப் பயிற்சியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா அவர்கள் பார்வையிட்டு ஆசிரியர்கள் சிறப்பாக வகுப்பறைச் செயல்பாடுகளை வடிவமைப்பதன் மூலம் குழந்தைகளின் கற்றலை மேம்படுத்த வேண்டும், எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கருத்தாளர்கள் வழங்கக்கூடிய பயிற்சிகளை முழுமையாக வகுப்பறையில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் வழங்கும் செயல்பாடுகளில் பங்கெடுக்க வேண்டும் எனவும் ஊக்குவித்தார் .

மேலும் வரும் கல்வியாண்டில் பள்ளி துவங்குவதற்கு முன் ஆசிரியர்கள் பள்ளி வளாகம் ‌வகுப்பறைகள் பாதுகாப்பு சார்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றிட ஆலோசனை வழங்கி குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை சரியாக பெற்றுதரவும் கேட்டுக் கொண்டார்.

பார்வையின் போது உதவித் திட்ட அலுவலர் தங்கமணி , முதுநிலை விரிவுரையாளர் ஆனந்தராஜ் வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் பள்ளித் துணை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்கள் செல்லசாமி, ஜெயசுதா, பாலசுப்பிரமணியன், தேவ ஆரோக்கியநாதன் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *