ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அஷேசம் ஊராட்சியில் ரூ.21.55 லட்சம் மதிப்பீட்டில் நூண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளதையும்;, பாரத பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் நெம்மேலி நெட்டிக்குளம் சாலை 4 கி.மீ. தூரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதையும், மேலமரவாக்காடு ஊராட்சியிலுள்ள ஊராட்சித்தொடக்கபள்ளியில் 32.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும் குழந்தைகள் மையத்தினையும் ஆய்வு மேற்கொண்டார்
சித்தேரி மரவக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய அங்கான்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், மரவக்காடு சித்தேரி வாய்க்கால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் பார்வையிட்டார் தொடர்ந்துமரவக்காடு ஊராட்சி சமத்துவபுரத்தில் பழுதடைந்த வீடுகளில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றுவருவதை பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்து உரியவர்களிடம் வீடுகளை ஒப்படைத்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ அறிவுறுத்தினார்.
ஆய்வில், மன்னார்குடி ஒன்றியக்குழுத் தலைவர் சேரன் குளம் டி மனோகரன் வட்டாட்சியர் கார்த்திவட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *