பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தந்தை பெரியார் கூட்ட மன்றத்தில் ஒன்றிய குழுத்தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம் (வ.ஊ), விஸ்வநாதன் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தலைமை இடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியராஜ் வரவேற்புரையும்,இறுதியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ் நன்றியுரையும் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், திட்ட செயல்மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் அசோகன்,
அண்ணாதுரை, எழிலரசன் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்களும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *