வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பு முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பையொட்டி வாழைமரம், தோரணம் கட்டி சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆலோசகர் பா. சிவநேசன், தலைவர் செல்வம், பொருளார் சிங்கு தெரு ராஜேஷ், செயற்குழு உறுப்பினர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் நாவளவன், உடற்கல்வி ஆசிரியர் பார்த்தசாரதி, விசலூர் கும்பேஸ்வரர் அய்யர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்,

பின்னர் +2மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்தாண்டு தனியார் பள்ளிகளில் பயின்ற அனைத்து விதமான மதங்களைச் சார்ந்த புதிய மாணவர்கள் சேர்க்கை பாராட்டுக்குரியது. மேலும் இன்னும் பல தனியார் பள்ளிகள் மாணவர்களை சேர்ப்பதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *