வலங்கைமான் ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெருவில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பைரவர் ஹோமம், மஹா அபிஷேகம், கலசாபிஷேகமும், சிறப்பு வடை மாலை அலங்காரத்தில் ஸ்ரீ பைரவர் பெருமான் அருள் பாலித்தார்.பின்னர் தீபாராதனையும், அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீ பைரவர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *