கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய அரியாணிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்டு போது ராதிகா, காயத்ரி, புவனேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோர் மையங்கள் செயல்பாட்டில் இருந்தது.
மையத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கி ஆலோசனை வழங்கியதாவது மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும் எனவும், எண்ணும், எழுத்தும் திட்டம் தொடக்க மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை நடைமுறையில் உள்ளது, மாணவர்களின் வருகை பதிவையும் இல்லம் தேடிக் கல்வி செயலியில் பதிவேற்றம் வேண்டும் எனவும்,பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் முறைகளை பெற்றோர்களுடன் கலந்து உரையாட வேண்டும் என்றும், தங்களுடைய படைப்புகளை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான வெளிவரும் தொடுவானம் இதழில் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
மாணவர்கள் வாசித்தல், கதை, விளையாட்டு, பாடல்கள் மற்றும் எளிய அறிவியல் செயல்பாடுகள் மூலம் கற்று தருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.. மாணவர்கள் கல்வியாண்டில் கோடை விடுமுறை பின் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு மன மகிழ்ச்சியுடன் வருகை புரிந்தார் கள். கொரனோ கால கற்றல் இழப்புகளை சரி செய்து தற்போது அடிப்படை திறன்களையும், வாசிப்பு திறன்களையும் மனமகிழ்ச்சியுடன் கற்பதற்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் வரும் கல்வி ஆண்டு தொடர்வது மிகுந்த பயனளிப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.