இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்த கொடையாளர் தினம் கடை பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் கோவை பேரூர் சேரன் கல்வி குழுமம் சார்பாக உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம் குறித்த பிரச்சார முழக்கம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

சேரன் கல்வி குழுமங்களின் நர்சிங்,பார்மசி,மற்றும் பிசியோதெரபி ஆகிய மூன்று துறை கல்லூரிகள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சேரன் நர்சிங் கல்லூரி முதல்வர் மீனா குமாரி,பார்மசி கல்லூரி முதல்வர் சிவகுருநாதன்,பிசியோதெரபி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி,மதுக்கரை புனித ஜோசப் ஆம்புலன்ஸ் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,சேரன் கல்வி குழுமத்தில் பயிலும் நூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் குருதி கொடை வழங்கினர்.

முன்னதாக இந்நிகழ்ச்சி குறித்து துறை தலைவர்கள் பேசுகையில்,தற்போது இளம்தலைமுறைமாணவ,மாணவிகளிடையே இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை அதிகபடுத்தும் நோக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபடுவதாகவும்,குறிப்பாக மருத்துவ துறை சார்ந்த இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் இரத்தத்தின் தேவை குறித்து கல்லூரியில் பயிலும் போதே தெரிந்து கொள்ளும் விதமாக இந்த முகாம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *