மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோடை விடுமுறை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளியின் மழலை மாணவ செல்வங்களுக்கு நேசமுடன் தலைமை ஆசிரியர் டி.ஸ்ரீதரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து அனைத்து மாணவர்களுக்கும் ரோஜா பூ கதர் ஆடை மரக்கன்று பேனா திருக்குறள் புத்தகம், கடலைமிட்டாய், தமிழக அரசின் விலையில்லா கல்வி உபகரணங்கள் ஆகிவை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மு.செல்வி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்ரா.தமிழ்செல்வி, ஜா.சந்தியா, பெற்றோர்கள் க.யசோதா,சீ.சரிதா, செ.மோகனா, ம.பிரகாஷ்,ஆசிரியர் ச.ராஜலட்சுமி, உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் முதல் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுதல் செய்தனர். மேலும் தலைமை ஆசிரியர் ஸ்ரீதரனை பகுதி மக்கள்
வெகுவாக பாராட்டினர்.