வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடியில் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் நவக்கிரக தலங்களில் ஒன்றாகும். பக்தர்களால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறது.
இந்த கோயிலுக்கு தினந்தோறும் வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுபான கடைஉள்ளது. இந்த மதுபான கடை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், இதனால்தினசரி பலர் விபத்துக்குள்ளாகி வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் மோகன் தலமையில், துணைத் தலைவர் ராசாத்தி சின்னப்பா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடியில் உள்ள அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.