தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் இன்று வருவாய் துறை சார்பில் விவசாயிகள் மாநாடு மற்றும் ஜமாபந்தி நிறைவு விழா திருப்பத்தூர் சப் கலெக்டர் பானு தலைமையில் நடைபெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு 104 பயனாளிகளுக்கு 1 கோடியே 51 லட்சத்து13 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதில் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன், கந்திலி ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன் மற்றும் மண்டல தாசில்தார் முரளி கிருஷ்ணன், வருவாய் துறை அதிகாரிகள் பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *