திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி வழியாக சென்று மீண்டும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிந்தது. இதில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரிகள் பள்ளி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *