பாரதிய ஜனதா கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D ராஜேந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி மயிலம் மேற்கு ஒன்றியம் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தெருமுனை பிரச்சாரத்தில் வரவேற்புரை வழங்கிய ஒன்றிய பொதுச் செயலாளர் மணிகண்டன் தலைமையேற்றும் மண்டல் தலைவர் G.பிரசன்னாராம் சிறப்புரை ஆற்றி மாநில பொதுக்குழு உறுப்பினர் புருஷோத்தமன், ஞானசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன் , மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துலட்சுமி மணிபாலன் மாவட்ட செயலாளர் சந்திரலேகா மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய தலைவருமான சரண்ராஜ் மாவட்ட பட்டியல் அணி செயலாளர் கருணாநிதி உரையாற்றினார். முடிவுரையாக ஒன்றிய பொதுச் செயலாளர் புருஷோத்தமன் முடிவுரை ஆற்றினார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.