பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய மன்ற கூடத்தில் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது.

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ஒன்றிய குழு துணை தலைவர் தியாக . பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாபநாசம் ஒன்றியம் ஓலைப்பாடி ஊராட்சி , எருமைப்பட்டி குடியானத் தெருவில்ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கருங்கல் ஜல்லி மற்றும் தார்சாலை அமைப்பது எனவும்

கபிஸ்தலம் ஊராட்சியில் தேசிய சுகாதார இயக்கம் 15 வது நிதிக்குழு மானியம் சுகாதார நிதியின் கீழ் வட்டார பொது சுகாதார மையம் அமைப்பது எனவும்

உள்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுமேலும் இக்கூட்டத்தில்வாழ்க்கை , தூத்தூர் கிராமங்களுக்கு இடையேயான தடுப்பணைகள் அமைத்து தரும் பட்சத்தில் மேற்படி கூட்டு குடிநீர் திட்ட பணிகளைத் தொடர எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதனை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் , ஒன்றிய பொறியாளர்கள் , ஒன்றிய மேற்பார்வையாளர்கள் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *