பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

நெல்லை உலர்த்த களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை அருகே, சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான உடையார் கோயில் தைக்கால், கீழகோயில் பத்து பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர வைக்க, எவ்வித வசதியும் இல்லாமல் இருந்து வரும் நிலையில்,
அரசு கொள்முதல் நிலையங்களிலும் போதுமான இடவசதியோ அல்லது களம் வசதியோ இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள நெடுஞ்சாலைகளில் கொட்டி வைத்து தினசரி ஆபத்தான நிலையில் உலர்த்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் நெல்லை உலர்த்துவதால்
வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதோடு நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிளாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. ஆகையால்
விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *