கொலை வழக்கின் குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிடாரகுளம் பகுதியில் ஏப்ரல் மாதம் நடந்த கொலை வழக்கின் குற்றவாளிகளான அப்பு @ அப்புரானந்தம் (42), மற்றும் இசக்கிபாண்டி (21) ஆகிய இருவரும் கடந்த மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், சன்முகநாதன் @ நெட்டூர் ராஜா(28), மாரிசெல்வம் @ மாரி (23) ஆகியோரையும் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.E.T.சாம்சன், IPS.,அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் சுரேஷ சமர்பித்தார்..