தென்காசி நகராட்சி உடையார் தெருவில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான திருவள்ளுவர் துவக்கப்பள்ளியில் வைத்து இலவச நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திருவள்ளுவர் துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியை செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தென்காசி சூர்யா மாடுலர் கிச்சன் நிறுவனத்தின் உரிமையாளர் உத்தமி அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியைகள் சொரூபா, ஜாஹீரா மற்றும் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.