தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி
ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் சுமைதாங்கி மெயின் ரோடு முதல் மயானக்கரை வரை சுமார் 3000 மரக்கன்றுகளை
ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் தலைமைஏற்று
மரகன்றுகளை நடுவு செய்து தொடங்கி வைத்தார்.
பஞ்சாயத்து துணை தலைவர் ஜமீல பீவி காஜாமைதீன் ஊராட்சி செயலர் பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் மரகன்றுகளின் ரகங்கள் செவ்வரளி, கொய்யா, புங்கை, வேம்பு, நவ்வா, வாகை, ஆகிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது இந்த நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் வாட்டர் டேங் ஆப்ரேட்டர், பணிதளப் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.