கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவமுகாம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் டௌன் பிளானிங் அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு ஆகியோர் முன்னிலையில் நகரின் தூய்மைக்காண மக்கள் இயக்கம் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் வால்பாறை ஆரம்பசுகாதாரநிலைய மருத்துவர் சுகவனன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் முதல் நகராட்சி அலுவலர்கள் வரையுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அனைவருக்கும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு மருத்துவமுகாமில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணி மேற்ப்பார்வையாளர்கள், சுகாதாரப்பணி மேற்பார்வையாளர்கள், நகரின் தூய்மைக்காண மக்கள் இயக்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.