சென்னை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவாங்கரை கிளை சார்பில் பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பில் தெருமுனைப் கூட்டம் நடைப்பெற்றது.
கிளைத் தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்இஸ்லாம் போதிக்கும் மனித நேயம் என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் ஹாஜிரா இஸ்லாம் எங்களுக்கு வழங்கிய உரிமைகள் என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் அப்துல்லாஹ் முன்மாதிரி இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பிலும் பேசி சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் தமிழகத்தில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகமாக்கவும் , இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . நிகழ்வின் இறுதியில் கிளை பொருளாளர் மஸிஹ் நன்றியுரையில் கூட்டம் நிறைவு பெற்றது.இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.