தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் இருந்து தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.
பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் இருந்து மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இதில் தென்கரைப் பேரூராட்சி தலைவர் நாகராஜ் தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் விசுமதி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் , கல்லூரி பேராசிரியர்கள், தென்கரைப் பேரூராட்சி உறுப்பினர்கள் தேவராஜ், கைலாசம், செந்தில் முத்துக்காமாட்சி, அழகன், தென்கரை காவல்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.