சென்னையில் போதை பொருள் விழிப்புணர்வுக்காக மாநில அளவிலான ஆணழகன் போட்டி
இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த கமான்டோ படை காவலர் முகம்மது பர்லிஸ்கான் இரண்டாமிடம் பெற்று வெற்றி:
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம் சார்பில் திருவெற்றியூரில் போதை பொருள் விழிப்புணர்வுக்காக மிஸ்டர் கிளீன் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் போட்டியாளர்களாக தமிழகத்தைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த மு.முகம்மது பர்லிஸ்கான் அவர்கள் 70 கிலோ எடை பிரிவில் தமிழ்நாடு போலிஸ் அணி சார்பாக கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் , திரைப்பட நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்திய அளவிலான காவல்துறை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் வெற்றி பெற்ற முகம்மது பர்லிஸ்கான் அவர்களுக்கு பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.