கோவை ரேஸ் கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 11 கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி நமக்கு வேண்டாம் போதைப்பொருள் என்று உறுதிமொழி எடுத்தனர் .

விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து போதை தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போதைப்பொருள் பயன்படுத்துவதனால் எந்த பிரச்சனையும் சரியாக போவதில்லை, அறிவுத்திறன் வளரபோவதில்லை. மாறாக அது மன ரீதியாக பாதிப்படைய வைக்கும் என்று கூறினார்.

மாணவர்கள் ஆரோக்கியமான, போதைப்பொருள் இல்லாத கோவை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாநகராட்சி ஆணையர் M.பிரதாப் அவர்கள் பேசுகையில், எதிர்கால கோவையை உருவாக்குவதில் மாணவர்களுக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்து பேசினார்.

மேலும் அவர் வரும் காலங்களில் தாமஸ் பார்க் பகுதி என்பது வருங்காலத்தில் இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான மையப்பகுதியாக அமையும் என்றும் கூறினார்.

மேற்கு மண்டல காவல்துறை ஆணையாளர் சுதாகர் பேசுகையில், சக மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் அவர்கள் நண்பர்களின் பங்கு முக்கியமானது என்றும் மாணவர்களின் நல்வளர்ச்சிக்கு காவல்துறை முக்கிய பங்களிக்கும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியானது காவல்துறையின் ஒத்துழைப்பினால் 48 மணி நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது என்றும் தங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம் இளம் வயதில் தலைமைக்கான பண்பை உருவாக்க வேண்டும் என்பதே யங் இந்தியன்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் அஸ்வின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஶ்ரீ கிருஷ்ணா, ஶ்ரீ ராமகிருஷ்ணா, குமரகுரு கே.ஜி, வி.எல்.பி, ஹேப்பி வாலி, சங்கரா, ஆர்.வி.எஸ், பி. பி.ஜி , ஈசா, போன்ற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இசை, பாடல்,நடனம் மூலம் ‘நமக்கு வேண்டாம்’ என்ற கருத்தினை வெளிப்படுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *