தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்கனாமாலை கிராமத்தில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிப்படை வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
மலை கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவிகள் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளிகளுக்கு சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் முதியோர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டால் இன்றளவும் பொதுமக்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை மாற வேண்டும் அவர்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் ஜில் ஜீவன் கட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பிஜேபி மாநில செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட தலைவர் C.வாசுதேவன் அறிவுறுத்தலின் பேரில் இளைஞரணி மாவட்ட தலைவர் விவேகானந்தன் செல்வகுமார் மண்டல் பொதுச்செயலாளர் நவீன் குமார் இளைஞர் அணி ஒன்றிய தலைவர் கமல் மற்றும் வாணியம்பாடி இளைஞர் அணி நகர தலைவர் மணிகண்டன் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜனா தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் விக்கி மற்றும் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் VDC. பிரதீப் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்