விக்கிரமங்கலத்தில் கஞ்சாபோதையில் இளம்பெண்ணை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யகோரி பெண்கள் சாலை மறியல்

சோழவந்தான்

சோழவந்தான் அருகே வடகாட்டுபட்டி பெரியார் காலணியை சேர்ந்தவ அரசு பஸ் கண்ட்ரக்டராக பணி புரிந்து வரும் சேகர் இவரது மகன்கள் தமிழ்வாணன்.
தமிழ்வருணன் தமிழ்ழகன் ஆகியோர் கடந்த ஜுன் 30.தேதி மாலை கஞ்சா போதையில் தகாத வார்த்தைகள் பேசி கலாட்ட செய்து மாற்று சமூகத்தை சேர்ந்த சிறுவன் தீனாவை தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

இச்சம்பவத்தை உறவினர் முத்து மனைவி சிந்தாமணி.25. தட்டிகேட்டபோது. சேகர மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் மண்வெட்டியால் சிந்தாமணியை தலையில் வெட்டி உள்ளனர் அப்போது தடுக்கவந்த ஜெயபாண்டி மற்றும் விமலாதேவி ஆகியோரையும் கம்பால் தாக்கி விட்டு தப்பியோடி நிலையில் இச்சம்பவத்தால் மூன்று பேரும் காயமடைந்தனர். இது குறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் காடுபட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் குபேந்திரன் மற்றும் போலீசார்.5.பேர் மீது கொலை முயற்சி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் கண்ட்ரக்டர் சேகர் மனைவி சித்ரா மகன் தமிழ்வாணன். ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தப்பியோடிய தமிழ்வருணன் தமிழ்ழகன்
ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தநிலையில் நேற்று காலை தீடீறென்று வடகாட்டுபட்டியை சேர்ந்த 50.க்கு மேற்பட்ட பெண்கள் விக்கிரமங்கலம் உசிலம்பட்டி சாலையில் .பஸ் மறியலில் ஈடுபட்டனர்..

விக்கிரமங்கலம் காடுபட்டி போலீசார். மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் குற்வாளிகள் இருவரையும் . விரைவில் கைது செய்வோம் என கூறியதையெடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் 1மணி இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *