வலங்கைமான் பகுதியில் 6-ந்தேதி மின் நிறுத்தம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 6-ந்தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும்பகுதிகளான ஆண்டான் கோவில், கீழ விடையல்,
சந்திரசேகர புரம், கோவிந்தக்குடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளைவேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர் மற்றும் ஆலங்குடி அதன் சுற்று
வட்டார பகுதிகளில் 6-ந்தேதி அன்று காலை 9- மணி முதல் மாலை 5-மணி வரை மின் விநியோகம் இருக்காது என வலங்கைமான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.