ஸ்.செல்வகுமார் செய்தியாளர்

விஜயகாந்த் பிரேமலதா அரசியலை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள் இனி இருவரின் உருவமாக விஜய பிரபாகரன் அரசியலை பார்ப்பீர்கள்சீர்காழியில் பேச்சு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி இல்ல காதணி விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தேமுதிக விஜய பிரபாகரன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் பின்னர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பேசுகையில் திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் நீட் தேர்வு நாள் உயிர் இருந்த அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வழி இல்லாமல் திமுக அரசு இருப்பதாகவும் இதே நீட் தேர்வில் பிரபஞ்சன் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியானது

திமுக அரசு இதுவரை பாராட்டவில்லை எனவும் தெரிவித்தார்.திமுக அரசின் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் கோவை டிஐஜி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது என குற்றம் சாட்டினார்.

தேமுதிக சார்ந்த கேப்டன் பிரேமலதா இருவரின் உருவமாகவே விஜய பிரபாகரன் அரசியலில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார் .90 ஹிட் ஆக நான் உங்களிடம் கோரிக்கை வைப்பது 90 கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ் என்னை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உலக அளவில் இசையை மேம்படுத்த புதிய முயற்சியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதற்கான பணியை நடைபெற்று வருவதாக தெரிவித்தார் விரைவில் உலக அளவில் இசையை கொண்டு சேர்ப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

வெயில் காலம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும் நான் சொன்ன தண்ணீர் திமுக அரசின் டாஸ்மாக் தண்ணீர் இல்லை இயற்கையான குடிநீர் என தெரிவித்தார்.

முன்னதாக தேமுதிக விஜய பிரபாகரனுக்கு மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் இருந்து சண்ட மேளம் சிலம்பம் வீரர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *