தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபயணத்தை தொடங்குகிறார். இதைதொடர்ந்து ஜூலை 30-ந்தேதி முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடனை, சிவகங்கையில் நடைபயணம் மேற்கொள்கிறார். அவர் ஆகஸ்ட் 1-ந்தேதி மானாமதுரையிலும், 2-ந்தேதி ஆலங்குடியிலும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 5-ந்தேதி மதுரைக்கு செல்கிறார். 9-ந்தேதி திருச்சி செல்லும் அவர், 13-ந்தேதி தூத்துக்குடியிலும், 14-ந்தேதி திருச்செந்தூரிலும், 15-ந்தேதி கன்னியாகுமரியிலும் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார். ஆகஸ்ட் 20-ந்தேதி நெல்லையிலும், 31-ந்தேதி தென்காசியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சங்கரன்கோவிலில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 9-ந்தேதி பழனிக்கும், 13-ந்தேதி கோவைக்கும் செல்கிறார். ஈரோட்டில் செப்டம்பர் 21-ந்தேதியும், கரூரில் அக்டோபர் 9-ந்தேதியும், திருச்சியில் 11-ந்தேதியும் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அக்டோபர் இறுதியில் சீர்காழியில் நடைபயணம் செல்கிறார். நவம்பர் 1-ந்தேதி மயிலாடுதுறை செல்லும் அண்ணாமலை அந்த மாத இறுதியில் நவம்பர் 27 அன்று சேலம் செல்கிறார். டிசம்பர் 8 அன்று தர்மபுரி செல்லும் அவர் டிசம்பர் 31-ந்தேதி அன்று திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு செல்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந்தேதி திருவள்ளூரில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு ஜனவரி 4-ந்தேதி மதுரவாயல், அம்பத்தூரில் நடைபயணம் செல்கிறார். சென்னையில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அண்ணாமலை, ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்களை தேர்வு செய்துள்ளார். வருகிற 28-ந்தேதி தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணம் ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடியும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அண்ணாமலை 5 மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைபயணத்துக்கு தமிழகம் முழுவதும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *