நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இவ்விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார்.
மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்
.துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரர் துணைத் தாளாளர் கிருபாநிதி இயக்குநர் டாக்டர் நிவேதா கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் முதல்வர்கள் டாக்டர் பேபி ஷகிலா டாக்டர் ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினர் .
இந்நிகழ்ச்சியில் இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் இப்போது 2023 – 2024 ம் கல்வியாண்டில் கல்லூரி வாழ்வில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரோஜா மலரை கொடுத்து வரவேற்றனர்
மேலும் மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் ஜெயவர்ஷினி கோகிலா மற்றும் முதுகலை பயின்ற முன்னாள் மாணவிகள் செல்வி சோபிகா, சந்தியா , செளந்தர்யா, ஆர்த்திகா ஆகியோர் கல்லூரியில் தாங்கள் பெற்ற சாதனைகள் பற்றியும் அவர்களின் அனுபவங்களையும் முதலாமாண்டு மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் தனது தலைமையுரையில் மாணவிகள் வகுப்பறையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும், வலிகள் தாங்கும் கற்கள்தான் சிற்பமாகும் அது போல் நீங்கள் பாடங்களை சுமையாக கருதமால் ஆசியர்களின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்
மேலும் மாணவிகள்
இன்றைய நவீன யுகத்தில் அலைப்பேசி மற்றும் இணையதள பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்ட நிலையில் அதை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் மேலும் தினமும் நூலகத்திற்கு சென்று புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
அப்போதுதான் வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலாமாண்டு மாணவிகள் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர் .
மேலும்
இந்த விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன்,
திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வெ குமரவேல் மற்றும் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் மேனகா நன்றியுரை கூறினார்.
விழா ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் த.ஸ்ரீதர்ராஜா செய்திருந்தார்.