மாடித்தோட்டம் அமைப்பதால் காய்கறிகளை தாமே உற்பத்தி செய்யலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.


மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களேஉற்பத்தி செய்து கொள்ள முடியும் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.


எல்லோருடைய வீடுகளிலும் பின்புறத்தில் தோட்டம்
அமைத்து செடிகள் வளர்க்கும் அளவுக்கு இடவசதி தற்போது இருப்பதில்லை. மாற்றாக வீட்டுமாடியில் காலியாக உள்ள இடங்களில் பாலித்தீன் பைகள்,உடைந்த குடம், மண் தொட்டி ஆகியவற்றில் காய்கறிவிதைகளை விதைத்து
வளர்க்கலாம்.

செடிகள் வளர்க்க தொடங்குவதற்கு முன்
பாலித்தீன் பைகளில்செம்மண், தென்னை நார் கழிவு, மண்புழு உரம்ஆகியவை அடங்கிய கலவையை நிரப்ப வேண்டும். தென்னை நார் கழிவு தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையது.

மண்புழு உரம்செடிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. இந்த கலவை அடங்கிய பாலித்தீன் பை மற்றும்மண் தொட்டிகளில் இரண்டு அல்லது மூன்று
விதைகளை வளர்க்கலாம். மாடித்தோட்டம் மூலம் வெண்டை, கத்தரி, புடலை, பாகற்காய், பீர்க்கங்காய் மற்றும் அழகு செடிகளையும் வளர்க்கலாம்.

மாடித்தோட்டம்அமைப்பதற்கான செலவும் மிகக்குறைவு தான். மாடித்தோட்டம் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும். மீதமுள்ள காய்கறிகளைகடைகளில் விற்று பயன்பெறலாம்.

மாடித்தோட்டம் மூலம் விவசாயிகளின் சத்துக்கள் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன் கூடுதல் வருமானமும்கிடைக்கிறது என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *