கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக தொடர்மழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பிர்லா பால்ஸ் உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இந்நிலையில் வால்பாறையில் உள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்றைய நிலவரப்படி 127 அடி உயர்ந்துள்ளது மேலும் இதே நிலை தொடர்ந்தால் அணையின் முழு கொள்ளளவான 165 அடியை எட்டி விரைவில் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது