திருவள்ளூர்

தமிழக அரசு சார்பில் ஏழை குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை யாக மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடி ப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்டது பெருவாயல் ஊராட்சியில் இந்த ஊராட்சியில் அரசு துவக்க பள்ளி வளாகத்தில் மகளிர்க்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு பெயர் சேர் க்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி செயலாளர் தங்கதுரை, தன்னார்வ ஊழியர் மகாலட்சுமி,உதவியாளர் இசை வாணி, பஞ்சாயத்து துப்புரவு பணி மேற்பார்வையால் வாணி ஸ்ரீ, உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சரி பார்த்தனர்.

முகாமில் பெருவாயல் ஊராட்சி சேர்ந்த பெண்கள் நீண்ட வரிசை யில் காத்திருந்து உரிமை தொகை க்கான மனுக்களை கொடுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *