பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாசை நெய்வேலியில் கைது செய்ததை கண்டித்து தர்மபுரியில் பாமகவினர் சாலை மறியல் நூறுக்கும் மேற்பட்டோர் கைது.
நெய்வேலியில் விவசாய விலை நிலங்களை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் கையகப்படுத்தும் பணியினை தற்பொழுது துவங்கியுள்ளது அதனை கண்டித்து பாமக மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டார் அப்போது காவல்துறையினர் அவரை கைது செய்தனர் அதனை கண்டித்து தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகரம் நான்கு ரோட்டில் திரண்ட பாமகவினர் அன்புமணி ராமதாசை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர் 30 க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்