திருவள்ளூர்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மணலி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
சென்னை புறநகர் மாவட்டம் மணலியில் தமிழ்நாடு தீயணை ப்பு மற்றும் மீட்பு பணித் துறை நிலையம் உள்ளது.இந்த தீயணைப்பு நிலையம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
தீயணைப்பு துறை மாவட்ட அலுவ லர் க.தென்னரசு அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு பெட்ரோல் ப்ராடக்ட் லிமிடெட் எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு மணலி சென்னை 68 என்ற முகவரியில் அமைந்துள்ள நிறுவ னத்தில் தீ பாதுகாப்பு பற்றிய விழி ப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி மணலி நிலைய அலுவலர் எம் முருகானந் தம் தலைமையில் மணலிநிலைய பணியாளர்களால் செய்து காண் பிக்கப்பட்டது.
பயிற்சியில் சிறப்பு அழைப்பாள ராக தொழிற்சாலை பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் கார்த்தி கேயன் (திருவொற்றியூர்) கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அந்நிறுவனத் தின் அருகாமையில் அமைந்து ள்ள தொழிற்சாலை பணியாளர் களும் பங்கு பெற்றனர்.