விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நெய்வேலி என் எல் சி நிறுவனத்தை கண்டித்து மாபெரும் போராட்டம் பர்கூர் பேருந்து நிலையம் முன்பு

என்.எல்.சிக்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்ததை கண்டித்து, போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட, பாட்டாளி மக்கள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் விவசாயின் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் நெய்வேலி நிர்வாகம் கடந்த மூன்று நாட்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பாமகவினர் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர் இதைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தபால் மேடு பர்கூரில் சாலையில் அமர்ந்து பாமக பர்கூர் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் ஈடுபட்டனர்

தலைவர் அன்புமணி ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் இடுபட்டனர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பாமகவினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *