தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அருகே புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்த திமுக எம்எல்ஏ..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்கா மல்லகுண்டா ஊராட்சி கோயாண்கொல்லை, மல்லகுண்டா, தாசிரியப்பனூர் வழியாக குருபவானிகுண்டா வரை புதிய பேருந்து வழித்தடத்தில் பேருந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி கலந்து கொண்டு கொடி அசைத்து புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்தார். இதில்
நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமுடி, திமுக
பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன்,
நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதி,
நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் துணை தலைவர் தேவராஜி, மல்லகுண்டா ஊராட்சிமன்ற தலைவர் சதிஷ்குமார்,
ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..