திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாத பராமரிப்பின் காரணமாக ஒரு நாள் சேவை நிறுத்தப்பட்டு வேலை செய்ய தொடங்கினர்.

தொடர்ந்து வேலை முடிந்த நிலையில் மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்பட்டன.

இதனையடுத்து இரண்டு நாட்களே ஆன நிலையில் திடீரென்று ரோப் கார் இயந்திரம் பழுதடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் நீண்ட நேரம் வெயிலில் வரிசையில் காத்திருந்த நிலையில் ரோப் கார் இயந்திரம் பழுது ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளன.

தொடர்ந்து ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர் பல மணி நேரம் காத்திருந்த நிலையில் ரோப்கார் இயங்காததால் தொடர்ந்து பக்தர்கள் வின்சில் குவிந்து வருகின்றனர்.

மேலும் வின்ச் சேவையில் மூன்று பெட்டிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது இரண்டு பெட்டிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன இதனால் வின்சில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து மலைக் கோயிலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ரோப்கார் இயந்திரங்களை சரியான முறையில் பழுது நீக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *