அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு வடக்கு தெரு பொது மகா சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அய்யனார் சுவாமிக்கு ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கனிமாற்றும் விழாவில் 500 மேற்பட்ட பெண்கள் பழ கூடையினை ஏந்தி மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் பாலமேடு வடக்கு தெருவில் இருந்து நடை பயணமாக 2 கிலோ மீட்டர் சென்று ஸ்ரீ அய்யனார் கோவில் அடைந்து அங்கு சுவாமிக்கு கனிமாற்றும் விழா நடைபெற்றது விழாவுக்கான ஏற்பாடுகளை வடக்கு தெரு பொது மகாசபை கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர் தொடர்ந்து இக்கோவிலில் பூசாரிகள் பல்வேறு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர். பாலமேட்டில் ஆண்டுதோறும் அய்யனார் சாமிக்கு கனி மாற்று திருவிழா நடைபெறுவது வழக்கம் ஆடி மாதங்களில் கிராம தேவதைகளை பொதுமக்கள் சிறப்பாக பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கூல் காய்ச்சி அம்மனுக்கு வேப்பிலை வைத்து படைத்து பக்தர்கள் பிரசாதமாக கோவில் நிர்வாகத்தினருக்கு வழங்குகின்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *