திருக்கோவலூர் முழு நேர கிளை நூலகத்தில் நூலகர் தின விழா நடைபெற்றது.

திருக்கோவலூர் வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்து நூலக தந்தை எஸ்.ஆர் அரங்கநாதன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புரவலர்களுக்கு பட்டையம் வழங்கி சிறப்புரையாற்றினார்

இந்நிகழ்விற்கு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலக பதிவுரு எழுத்தர் த.சர்வர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்பணி நிறைவு பெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர் உத்திரகிரி, பத்திர எழுத்தர் உதவியாளர் சி.தானிவேல் ஆகியோருக்கு புரவலர் பட்டையம் வழங்கப்பட்டது

நூலகர் வி.தியாகராஜன் அவர்களிடம் கவிஞர் கவிநிலவன், தீபிகா ஆகியோர் தலா ரூபாய் 1000 செலுத்தி புரவலராக இணைந்தனர்சிறுகதை எழுத்தாளர் ம.விருதுராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்

நூலகர். மு.சாந்தி நன்றி கூறினார்,

ஏற்பாடுகளை பணியாளர்கள் சு.சம்பத், ச.தேவி ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *