நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 2 கோடி மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் மரூர்பட்டி, ஆவல்நாயக்கன் பட்டி, எர்ணாபுரம், தொட்டிபட்டி, கீழ்சாத்தம்பூர் ஆகிய ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 2 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, அங்கன்வாடி மையம், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், சமத்துவ சுடுகாடு பராமரிப்பு, கதிரடிக்கும் களம், கழிவுநீர் வாய்க்கால் ஆகிய 35க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்ட பணிகளுக்காக நாமக்கல் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவருடன் மாவட்ட திமுக துணைச் செயலாளர் நலங்கிள்ளி, மாவட்ட பிரதிநிதி மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுசீலா சண்முகம், சாந்தி பழனிசாமி, மாரப்பன், புவனேஸ்வரி பாலமுருகன், விஜயா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ஜெயகுமார் மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *