நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான ரேங்கிங் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் 750 யோகாசன வீரர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்

நாமக்கல்

தேசிய அளவிலான ரேங்கிங் யோகாசன சேம்பியன்ஷிப் 2023 ஓப்பன் போட்டி இன்று 17.08 .2023 நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் நடைபெற்றது

நாமக்கல் மாவட்ட யோகா அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் கே. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த யோகாசன போட்டியில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 750 க்கும் மேற்பட்ட யோகாசன போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்..

இந்த போட்டியில் ஓவராலக தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது
அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி யோகாசன சாதனையாளர்களுக்கு வெற்றி சான்றிதழ், வெற்றி கோப்பைகளை வழங்கினார்கள்,

9 வயது முதல் 35 வயது வரையிலான ஆண்களும் பெண்களும் மொத்தம் 750 பேர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

இவர்களுக்கு ஆம்ஜூ இந்தியா பிரைவேட் லிமிடெட் சிஇஓ. ஜி. ஸ்கந்தகுமார், சதர்ன் டிரான்ஸ்போர்ட் பி. தயாளன் ,யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரொமோஷன் அசோசியேசன் ஆப் இந்தியாவில் சிஇஓ. பி. ஆர் .நாகராஜ் நாமக்கல் மாவட்ட யோகாசன அசோசியேசன் தலைவர் கே .பி .பாண்டியராஜன் நாமக்கல் மாவட்ட யோகாசன அசோசியேசன் செயலாளர் சி. புவனேஸ்வரி ஆகியோர்கள் வெற்றி கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *