பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
லடாக்கில் வாகன விபத்தில் பலியான ராணுவ வீரர்களுக்கு
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா இரங்கல் ……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்
லடாக் பகுதியில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒன்பது ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்கிற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.
உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சவாலான தட்ப வெப்பநிலையிலும் இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு பங்காற்றிய வீரர்களின் சேவை அளப்பரியது. மதிப்பிட முடியாதது. விபத்தில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த வீரர்கள் மிக விரைவாக குணம் பெற்றுத் திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர்.
எம். எச் .ஜவாஹிருல்லா இரங்கல்
தெரிவித்துள்ளார்.