மதுரை அதிமுக நிகழ்ச்சி மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை, பாட்டு பாடியும், ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் வகையில் பேசிய முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் மற்றும் அதனை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி, சிவகங்கை மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமையில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில் முன்னிலையில் மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, துணைதலைவர் மார்க்கெட் கமலா,வலைதள பொறுப்பாளர் திவ்யா,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன்,மாவட்ட தொண்டரணி துணைத் தலைவர் பாண்டியம்மாள் உள்பட ஏராளமான மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.