சிவகங்கை நகர் பகுதியில் மன்னர் அரசு துரைசிங்கம் கல்லூரியில் பேராசிரியர்கள் அதிரடி இடமாற்றம்உயர் கல்வி இயக்குனர் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியில் உள்ளமன்னர் அரசு துரைசிங்கம் கல்லூரியில் பணி செய்யக்கூடிய பேராசிரியர்களுக்கிடையே சாதி வாரியாக வேற்றுமை பார்க்கப்படுவதாகவும், சாதி வாரியாக அவ்வப்போது பேராசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.


இங்கு பணி செய்யும் பேராசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் ஆப் குழுக்களை அமைத்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களை சாதி வாரியாக பட்டியலிட்டு சாதிய கட்டமைப்புகளை கல்லூரிக்குள் உருவாக்கி வருவதாக இணையத்தில் வீடியோ வைரலானதை தொடர்ந்து நேற்று சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா மற்றும் சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர்கோட்டைச்சாமி ஆகியோர் மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் விசாரணை நடத்தினர்

அதனைத் தொடர்ந்து பொருளியல் துறையின் பேராசிரியர் சுப்ராம் மயிலாடுதுறை அரசு பெண்கள் கலைக் கல்லூரிக்கும் அதேபோல் பொருளியல் துறையின் தலைவர் பேராசிரியர் கிருஷ்ணன் நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கல்லூரிக்கு அதிரடி பணி மாற்றம் செய்து உயர் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *